நோய்வாய்ப்பட்டிருந்த யானைக்கு
சிகிச்சை அளிப்பு

0
110

தம்பலகாமம் புலி ஊற்றுக் குளம் பகுதியில் நடமாட முடியாத நிலையில் நோய்வாய்ப்பட்டிருந்த யானைக்கு சிகிச்சை அளிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

30 வயது மதிக்கத்தக்க இந்த ஆண் யானைக்கு கிரித்தலை வனவிலங்கு கால்நடை மருத்துவர் சமீர கலலிங்கு ஆராச்சி உள்ளிட்ட குழுவினர் இவ்வாறு சிகிச்சை அளித்துள்ளனர்.

இந்த யானையானது ஏதேனும் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதா அல்லது மனித செயற்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள கந்தளாய் தள காரியாலயம் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.