பண்டுவஸ்நுவர பிரதேச சபையில் சர்வசன கட்சி உறுப்பினர் வெளியேற்றப்பட்டதால் ஆட்சி அதிகாரம் NPP வசமானது

0
16

சர்வசன கட்சி உறுப்பினருக்கு வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாததின் காரணமாக பண்டுவஸ்நுவர பிரதேச சபையின் அதிகாரத்தைத் தேசிய மக்கள் சக்தி கட்சி கைப்பற்றியது.கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பண்டுவஸ்நுவர பிரதேச சபைக்குத் தேசிய மக்கள் சக்தி சார்பில் 19 பேரும். எதிர்க்கட்சிகள் சார்பில் 19 பேரும் என 38 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.

இந்நிலையில் இன்று பண்டுவஸ்நுவர பிரதேச சபையின் தலைவர். உபதலைவர் ஆகியோரை தெரிவு செய்யும் முதலாவது கூட்டம் நடைபெற்றது.இதன்போது, மக்கள் தெரிவுசெய்த சர்வசன கட்சி உறுப்பினரின் பெயர் வர்த்தமானியில் வெளியிடப்படாதமையால் அவரை சபையிலிருந்து வெளியேற்றுவதற்குத் தீர்மானம் எடுக்கப்பட்டது.பின்னர் நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில், தேசிய மக்கள் சக்தியிலிருந்து சபாநாயகர் பதவிக்குப் போட்டியிட்டவர் 19 வாக்குகள் பெற்றதோடு ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட உறுப்பினருக்கு 18 வாக்குகளே கிடைக்கப்பெற்றன.