பதுளை வேவஸ்ஸ தோட்டத்தில் 60 வயது பெண் படுகொலை: சந்தேக நபருக்கு விளக்கமறியல்

0
148

பதுளை – வேவஸ்ஸ தோட்டத்தில் 60 வயது பெண்ணின் படுகொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட நபரை எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் சமிந்த கருணாதாஸ உத்தரவிட்டுள்ளார்.

குறித்த தோட்டத்தில், கடந்த 23ஆம் திகதி பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

பதுளை பொலிஸின் மோப்ப நாயான டஸ்பியின் உதவுடன் இந்த படுகொலையுடன் தொடர்புடைய நபரை பொலிஸார் கைதுசெய்தனர்.

சந்தேக நபரை நேற்று (26) பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து, அவரை அடுத்த மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதவான் சமிந்த கருணாதாச உத்தரவிட்டுள்ளார்.

சந்தேக நபரின் செருப்பு, குறித்த பெண் படுகொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து சிறிது தூரத்தில் காணப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு, பொலிஸ் மோப்ப நாயின் துணையுடன் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளையடுத்து, சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் அவரால் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரத்தப்; படிந்த ஆடைகளும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.