பயணத்தடையால் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

0
287

நாட்டில் அமுலிலுள்ள பயணத்தடை காரணமாக கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளதை அவதானிக்க முடிவதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

எனினும் மரணங்கள் மற்றும் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் பாரிய மாற்றமொன்று ஏற்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விசேட வைத்திய நிபுணர்களின் தீர்மானங்களுக்கு அமைய பயணத் தடையை தொடர்வதா, இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் விசேட வைத்திய நிபுணர்களின் தீர்மானங்களுக்கு அமையவே தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.