யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 315 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்கு கொழும்பிலிருந்து வீடு திரும்பிய நிலையில் நேற்று முன்தினம் ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் குடும்ப உறுப்பினர்கள் மூவருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டது.
பரிசோதனைக்கு உட்பட்டவர்களில் வடமாகாணத்தில் ஏனையவர்களுக்கு தொற்று இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.