பாராளுமன்றத்தில் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி

0
146

பாராளுமன்றத்தில் நேற்று (18) மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின்போது, நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, பாராளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்ற ஊழியர், ஊடகவியலாளர், நடனக் குழுவின் கலைஞர் உள்ளடங்களாக நால்வருக்கே தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு ஜனாதிபதியின் தலைமையில் நேற்று ஆரம்பமான நிலையில், பாராளுமன்றத்துக்கு வருகைதந்தவர்கள் அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதன்போதே நால்வருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

நேற்றைய தினம் பாராளுமன்றத்தில், ஜனாதிபதிக்கு விசேட வரவேற்பளிக்கப்பட்டது. இதன்போது வரவேற்பு நடனமும் இடம்பெற்றது.