பாவனைக்கு உதவாத பொருட்கள் விற்பனை : வர்த்தகருக்கு கடும் எச்சரிக்கை

0
161

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில், பாவனைக்கு உதவாத பொருட்களை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சாவகச்சேரி நகர சபை பிரிவு பொது சுகாதார பரிசோதகர் சூ.குணசாந்தன் தலைமையில், பொது சுகாதார பயிலுநர்கள் அடங்கிய குழு, கடந்த 20 ஆம் திகதி, சாவகச்சேரி நகர்ப் பகுதியில் வியாபார நிலையங்களில், திடீர் பரிசோதனை மேற்கொண்டது.

இதன் போது, காலாவதியான பிஸ்கட் சோடா, வண்டு பிடித்த கடலை போன்றவற்றை, விற்பனைக்காக வைத்திருந்தவர்களுக்கு எதிராக, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பொருட்களை கைப்பற்றிய பொது சுகாதார பரிசோதகர், வியாபார நிலைய உரிமையாளரை கைது செய்து பிணையில் விடுவித்ததுடன், அவருக்கு எதிராக, இன்று, சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் வழக்குத் தொடுத்தார்.

வழக்கு விசாரணைக்கு வந்த போது, உரிமையாளர் குற்றங்களை ஏற்றுக்கொண்டதை அடுத்து, 62 ஆயிரம் தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன், கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டார்.