புத்தளத்தில் அரியவகை மான் கண்டுபிடிப்பு

0
288

புத்தளம் மாவட்டத்தின் நாத்தாண்டிய பிரதேச செயலகத்துக்குட்பட்ட தப்போவ பகுதியில் அரியவகை சந்தன நிறமுடைய சருகுமான் அப்பகுதி மக்களால் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளது என புத்தளம் வனஜீவராசிகள் பிராந்திய அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த அரியவகை மானை பிடித்த பிரதேசவாசிகள் அது தொடர்பில் புத்தளம் வனஜீவராசிகள் பிராந்திய அலுவலக அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து அப்பகுதிக்குச் சென்ற வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மானை மீட்டு வனஜீவராசிகள் பிராந்திய அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.