நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன இராஜினாமா

0
135

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன தனது எம்.பி பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

அவர் தனது இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளமையை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.

உத்திக பிரேமரத்ன கடந்த 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் 133,550 வாக்குகளைப் பெற்று அனுராதபுர மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தார்.

தற்போது விமல் வீரவன்ஸ தலைமையில் நாடாளுமன்றில் சுயேட்சையாக செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.