நுவரெலியா மாவட்டம், பொகவந்தலாவை மற்றும் காசல்ரீ பகுதிகளில், நேற்று (8) மாலை ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக, சுமார் 15 ஏக்கர் மாணா புற்காடு எரிந்து நாசமாகியுள்ளது.
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காசல்ரீ நீர்த்தேக்க கரையோரத்தை ஒட்டியதான வனராஜா பகுதியில் ஏற்பட்ட தீ காரணமாக, குடிநீர் விநியோக குழாய்கள் எரிந்து நாசமாகியதால் வனராஜா பகுதி குடியிருப்பாளர்கள் குடிநீரின்றி பாதிப்படைந்துள்ளனர்.
இதேவேளை பொகவந்தலாவை பிரதேசத்தில் ஏற்பட்ட தீ பரவலால் பல ஏக்கர் காடு எரிந்துள்ளது.
மலையகத்ததில் தொடரும் வறட்சியான காலநிலையில் காடுகளுக்கு தீ வைக்கும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக நீரேந்தும் பகுதிகளில் நீர் வற்றிவருகின்றது.
மேலும் காசல்ரீ, நோட்டன் மேல்கொத்மலை கெனியன் நீர்த்தேக்கங்களிம் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது.