பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு, பாரம்பரிய நெல் வழங்கல்

0
180

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தினால், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட, பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு, நஞ்சற்ற பாரம்பரிய நெல், இன்று பகிர்ந்தளிக் கப்பட்டுள்ளது. மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவன பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில், மன்னார் முருங்கன் பகுதியில் உள்ள நெல் களஞ்சியசாலையில் வைத்து, நெல் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிறுவனத்தினால், கடந்த காலங்களில், மன்னார் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட, நஞ்சற்ற பாரம்பரிய நெல், விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நிலையில், அவர்களிடம் இருந்து மீளப் பெற்றுக்கொள்ளப்பட்ட நெல், களஞ்சியசாலையில் சேமித்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த நெல்லில் இருந்து, சுமார் ஆயிரத்து 800 கிலோ கிராம் நெல், இன்று மதியம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில், மிகவும் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு, எதிர்வரும் தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அவர்களின் உணவுத் தோவைக்காக, பாராம்பரிய நெல், இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.