பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்பு

0
153

இங்கிலாந்தில், பொதுநலவாய செயலகத்தில் இடம்பெறும் பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்றுள்ளார்.

இன்று இடம்பெறவுள்ள மன்னர் மூன்றாம் சார்ள்ஸின் முடிசூட்டு விழாவில் பங்கேற்பதற்காக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இங்கிலாந்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் நேற்று இடம்பெற்ற பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி பங்கேற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதேவேளை ருவண்டா ஜனாதிபதி போல் ககாமையும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க லண்டனில் சந்தித்துள்ளார்.

இதன்போது, இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.