28 C
Colombo
Tuesday, October 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

போதைப் பொருட்களுடன் 31 பேர் கைது!

நுவரெலியாவில், போதை பொருட்களுடன் 31 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.நுவரெலியா – கிரக்கரி வாவிக் கரையிலுள்ள விடுதியொன்றில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்விற்கு பல்வேறு போதைப் பொருட்களை கொண்டு வந்த 31 இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக நுவரெலியா தலைமையக பொலிஸ் பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

முகநூல் விருந்தில் நாடளாவிய ரீதியில் இளைஞர்கள் பங்குபற்றவுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று மாலை நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைதாகியுள்ளனர். இதன்போது கஞ்சா, ஐஸ், குஷ் ரக போதைப்பொருள், போதைப்பொருள் மாத்திரைகள் மற்றும் சட்டவிரோத சிகரெட்டுக்கள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளதாகவும், கைதான சந்தேக நபர்கள் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles