போதைப்பொருட்களுடன் சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற 27 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட இளைஞர்களிடம் கஞ்சா மற்றும் போதை வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நல்லதண்ணி மற்றும் ஹட்டன் பொலிஸார் இணைந்து சந்தேகநபர்களைக் கைதுசெய்துள்ளனர்.
18 தொடக்கம் 30 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களில் 25 பேரை ஹட்டன் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது, அவர்களுக்குப் பிணை வழங்கப்பட்டது என்றும் பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.