மகனின் தாக்குதலில் தந்தை பலி: மகன் கைது

0
143

நுவரெலியா, இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட டெல்மார் தோட்டத்தில் மகனின் தாக்குதலுக்கு இலக்காகி நபரொருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

டெல்மார் மேற் பிரிவு தோட்டத்தை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான சுப்பிரமணியம் செல்வநாயகம் (வயது 62) என்பவரே உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு தந்தைக்கும் மகனுக்கும் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் சண்டையாக மாறியுள்ள நிலையில் மகன் தந்தையை இரும்பினால் தாக்கியுள்ளதாக தெரியவருகிறது.

பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடையவரை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.