சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாடுகள் சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படுகின்ற கைதுகள் தொடர்பாக தீவிர கவனத்தை செலுத்த வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ள மாற்றுக் கொள்கைக்கான நிலையம்,
பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை கட்டுப்படுத்தும் முயற்சிகளை கைவிடுமாறு அறிக்கை மூலம் வலியுறுத்தியுள்ளது.
நடாஷா எதிரிசூரிய இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமையானது மத நல்லிணக்கத்தை பாதுகாப்பதாகக் கூறி, கருத்து சுதந்திரத்தை மட்டுப்படுத்துவதற்கான முயற்சி என்றும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் குறிப்பிட்டுள்ளது.