மக்களுக்கு துரோகத்தனத்தை புரிந்து விட்டு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினர் எமது கட்சியை விமர்சிக்கின்றார்கள் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளரும் யாழ் மாவட்ட உதவிநிர்வாக செயலாளருமான ஐ,சிறீரங்கேஸ்வரன் தெரிவித்தார்
டான் தொலைக்காட்சிக்கு வழங்கிய விசேட செவ்வியின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்
நாங்கள் தேர்தல் காலத்தில் மக்களுக்கு உண்மையான அரசியல் நிலைப்பாட்டை முன்வைத்து தான் தேர்தலில் போட்டியிடுகின்றோம்
எங்கள் தேர்தல் விஞ்ஞாபனங்களில் வெளியிட்டிருக்கின்றோம்.
அந்த வகையில் நாங்கள் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கின்ற போது திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் எங்களுக்கு எதிரான கருத்துக்களை கூறுவது என்பது ஏற்க முடியாது
உண்மையில் மக்களை ஏமாற்றுகின்ற துரோகங்களை புரிந்தவர்கள் என்றால் அகில இலங்கை தமிழ் காங்கிரசுக்கு அது ஒரு கைவந்த கலை
மலையக மக்களின் வாக்குரிமையை பிரயா உரிமையைபறிப்பதற்காக வாக்குரிமையை பறிப்பதற்காக அன்றைய ஆட்சியாளர்களுடன் சேர்ந்து திரு ஜிஜி பொன்னம்பலம் அவர்களும் பி. குமாரசாமி அவர்களும் மலையக தமிழ் மக்களுடைய வாக்குரிமையை பறிப்பதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டு அதனுடாக அதற்கு கைமாறாக அமைச்சு பதவினையும் பொறுப்பேற்று இருந்தார்கள்
அவ்வாறு ஒரு துரோகத்தனத்தை செய்தவர்கள் தான் இன்று எமது கட்சியின் நிலைப்பாட்டை பற்றி பேசுகின்றார்கள் அதேபோல் தற்பொழுது 13வது திருத்த சட்டத்தை ஆரம்ப புள்ளியாக கொண்டு நாம்தீர்வினை முன்னெடுக்கின்ற போது 13-வது திருத்தச் சட்டத்தை முற்றாக நிராகரிப்பதாக சொல்கின்றார்கள் ஆனால் அவர்கள் 13 வது திருத்தச் சட்டத்திற்கு உள்ளே இருக்கின்ற உள்ளூராட்சி தேர்தல்களில் போட்டியிட்டு மாநகர முதல்வராக உள்ளூராட்சி மன்ற உறுப்பினராக இருந்தார்கள்
அதேபோல ஒற்றை ஆட்சிக்குள் இருக்கின்ற பாராளுமன்றத்தில் சத்தியபிரமாணத்தை எடுத்து பாராளுமன்ற உறு
ப்பினராக இருக்கின்றார்கள் அவர்களுடைய அரசியல் யாப்பிலே ஆரம்ப காலத்தில்அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்னுடைய அரசியல் ஜாப்பில் இருக்கின்றதும் ஒற்றை ஆட்சி என்பது தான் ஆகவே மக்களுக்கு இவ்வாறு துரோகம் செய்கின்றவர்கள் தான் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் என்பதனை நாங்கள் தெளிவாகச் சொல்ல விரும்புகின்றோம்
நாங்கள் எந்த சந்தர்ப்பத்திலும் மக்களுக்கு தெளிவான அரசியல் நிலைப்பாட்டை முன்வைத்து நாங்கள் தேர்தல் விஞ்ஞானத்தை வெளியிட்டுத்தான்மக்கள் ஆணை வழங்கியிருக்கிறார்கள் எனவே திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் தெரிவிக்கும் கருத்தினை நாங்கள் முற்றாக நிராகரிக்கின்றோம் என்றார்