சர்வதேச சுற்றுசூழல் பாதுகாப்பு தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் கண்டல் தாவரமரநடுகை நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட சாரணர் சங்கத்தின் ஆணையாளர் வி .பிரதீபன் ஏற்பாட்டில் மட்டக்களப்பு புளியந்தீவு வாவிக்கரை பகுதியில் கண்டல் தாவர மரநடுகை நிகழ்வு இடம்பெற்றது
மட்டக்களப்பு புளியந்தீவு வாவிக்கரை பகுதியில் இடம்பெற்ற கண்டல் தாவர நடுகை நிகழ்வில் உதவி மாவட்ட திரி சாரண ஆணையாளர் எம்.மோகனகுமார், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.எம் சந்தன சமரசிங்க, மாவட்ட சாரணர் சங்க ஆசிரியர்கள் ,மாணவர்கள் கலந்துகொண்டு வாவிக்கரையில் கண்டல் தாவரங்களை நாட்டிவைத்தனர்
சர்வதேச சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தினை முன்னிட்டு மரநடுகை நிகழ்வுகள் தேசிய ரீதியில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடைக்கு அமைய சுகாதார நடைமுறையின் கீழ் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன