மட்டக்களப்பில் கால்பந்தாட்ட லீக் போட்டிகள்

0
198

‘சுதந்திரக்கிண்ண உதைப்பந்தாட்டம் சிலோன்’ இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர் தலைமையில் கால்பந்தாட்ட லீக் போட்டிகள் மாகாண மட்டத்தில் தெரிவு செய்யப்பட மாகாண அணிகளுக்கிடையில் இரண்டு நாள் லீக் போட்டிகளாக மாகாண மட்டத்தில் நடைபெறுகின்றது.

வளர்ந்து வருகின்ற உதைப்பந்தாட்ட வீரர்களை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியாக மாகாணங்களுக்கிடையில் தெரிவு போட்டியாக கால்பந்தாட்ட லீக் போட்டிகள் தொடர்ச்சியாக அனைத்து மாகாணங்களிலும் மாவட்டங்களிலும் நடைபெற்று வருகின்றது.

அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்ட சங்கத்தின் பொதுச்செயலாளர் டி.காந்தன் ஒருங்கிணைப்பில் சங்கத்தின் தலைவர் எம்.உதயகுமார் தலைமையில் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நேற்றைய தினம் நடாத்தப்பட்ட மாகாணங்களுக்கிடையிலான முதல் போட்டியில் வடமாகாண மற்றும் தென்மாகாண அணிகள் மோதிக்கொண்ட போட்டியில் வடமாகாண அணி மூன்று கோள்களையும் தென்மாகாண அணி ஒரு கோளினையும் பெற்றுக்கொண்டது. போட்டியில் வடமாகாண அணி வெற்றி பெற்றது.

நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட முதல் லீக் போட்டி நிகழ்வில் அதிதிகளாக நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன், மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் காணி நவருபரஞ்சனி முகுந்தன், பொலனறுவை மாவட்ட பொலிஸ் அத்தியட்சர்
பி.கே.சந்திரபால, பிரதி முதல்வரும் மாவட்ட கால்பந்தாட்ட சங்கத்தின் உபதலைவருமான கந்தசாமி சத்தியசீலன், மாவட்ட விளையாட்டுத்துறை உத்தியோகத்தர் வி.ஈஸ்வரன், மாநகர சபை பொறியிலாளர் உட்பட உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.