மட்டக்களப்பில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட லைட் ஹவுஸ் திருச்சபையின் ஜெப ஆலயம் திறப்பு

0
76

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட புளியந்தீவு பகுதியில் கடந்த 24 வருடங்களாக பாதுகாப்பு படையினர்
வசம் இருந்த மட்டக்களப்பு வைத்தியசாலை வீதி லைட் ஹவுஸ் திருச்சபை ஜெப மையத்தின் காணியானது விடுவிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைத்ததன் பின்
புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஜெப ஆலயம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
தேவாலயதின் சிரேஸ்ட போதகர் அருட்பணி கே.விஜயன் தலைமையில் இடம் பெற்ற விழாவில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்
திருமதி ஜஸ்டினா முரளிதன் கலந்து கொண்டார்.
நிகழ்வில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் கே.எம்.ஏ.கே. பண்டார, அருட்பணி கே.கிருஸ்னராஜா, போதகர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.