‘உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம் ‘ எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவுடன் இணைந்து
அமிர்தகளி தூய கப்பலேந்தி அன்னை ஆலய கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் இன்று முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கியில் நிலவும் இரத்தப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த இரத்ததான முகாம் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் தவக்கால முயற்சியினை முன்னிட்டு அமிர்தகளி தூய கப்பலேந்தி அன்னை ஆலய கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின்
தவக்கால முயற்சியின் ஒன்றாக இந்த இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.
அமிர்தகளி தூய கப்பலேந்தி அன்னை ஆலய பங்குத்தந்தை இன்னாசி ஜோசப் அடிகளாரின்
தலைமையில் இடம்பெற்ற இரத்ததான நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கிப்பிரிவு வைத்தியர் ரந்திம,
வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள், அமிர்தகளி தூய கப்பலேந்தி அன்னை ஆலய கத்தோலிக்க இளைஞர்,யுவதிகள்,
பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு குருதியினை தானமாக வழங்கியிருந்தனர்.