மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் சிறுமியின் உயிரைக் காவுகொண்ட பிளாஸ்ற்றிக் பரல்

0
222

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுவாஞ்சிகுடி மாரியம்மன் கோயில் வீதியில் அமைந்துள்ள வீட்டுத்திட்டத்தில் சிறியரக பிளாஸ்ற்றிக் பரல் ஒன்றினுள் 3வயது சிறுமி தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

நேற்றுப் பிற்பகல் குறித்த சிறுமி வீட்டிலிருந்த சிறியரக பிளாஸ்ற்றிக் வரலில் கையிலிருந்த ஜம்பு பழத்தை போட்டுள்ளார். பின்னர் அந்த பழத்தை மீண்டும் எடுப்பதற்கு முயற்சித்த வேளை சிறுமி தலைகீழாக அந்த சிறிய ரக வரலினுள் தவறி வீழ்ந்துள்ளார். 23 அங்குலம் உயரம் கொண்ட அந்த சிறியரக வரலில் 8 அங்குலம் அளவில் அதனுள் தண்ணீர் இருந்துள்ளது.

சிறுமி தவறி வீழ்ந்ததமை அவதானித்த சிறுமியின் 5 வயதுடைய சகோதரன் தாயிடம் கூறியுள்ளார் உடன் விரைந்து மகளை மீட்டதாய் அயலவர்களின் உதவியுடன்,களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியாசலைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

எனினும் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதவான் நீதிமன்ற நீதிபதி கே.ஜீவராணி உத்தரவுக்கமைய சடலத்தைப் பார்வையிட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம், பிரேத பரிசோதனைக்குட்படுத்தும்படி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.