மட்டக்களப்பு காத்தான்குடியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே. முரளிதரன் நேற்று
மாலை நேரடியாக சென்று பார்வையிட்டார்.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள சுகதா வித்தியாலயத்துக்குச் சென்ற அரசாங்க அதிபர், பாடசாலையில் தேங்கியுள்ள வெள்ள நீரை அகற்றுவதற்கான நடவடிக்கையை
மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தோணா கால்வாய் மற்றும் வெள்ளம் சூழ்ந்துள்ள வீடுகளையும் காத்தான்குடி பிரதேச செயலாளருடன் இணைந்து, மாவட்ட அரசாங்க அதிபர் பார்வையிட்டிருந்தமை
குறிப்பிடத்தக்கது.