மட்டக்களப்பு காத்தான்குடியில் சர்வதேச மகளிர் தினம்

0
104

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில், சர்வதேச மகளிர் தினம் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இன்று கொண்டாடப்பட்டது.
‘அவளுடைய பலம் நாட்டிற்கு முன்னேற்றம்’ எனும் தொனிப் பொருளில், மகளிர் தினம் கொண்டாடப்பட்டது
காத்தான்குடி பிரதேச செயலாளர் உதய சிறீதர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கேக் தயாரித்தல், அழகு நிபுணர் சேவைகள் மற்றும் ஒப்பனை கலைத்திறன்கள் இடம்பெற்றதுடன், மாணவிகளின் கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
நிகழ்வில் சிறந்த பெண் சமூக செயற்பாட்டாளர்கள், சிறந்த தொழில் முயற்சியாளர்கள் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
போட்டி நிகழ்ச்சிகளில் பங்குபற்றிய பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது.
காத்தான்குடி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் சில்மியா, காத்தான்குடி பெண்கள் காப்பகத்தின் தலைவி சல்மா அமீர் ஹம்சா,பெண் சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.