கடவுச்சீட்டு வழங்கும் புதிய திட்டத்திற்கான விரல் அடையாளம் பெறும் நடவடிக்கை மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலகத்தில் மட்டக்களப்பு மாவட்ட
அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன் போது கடவுச்சீட்டு பெறுவதற்கு பதிவு செய்தவரின் புகைப்படம் எடுக்கப்பட்டு கைரேகையும் பெறப்பட்டு கடவுச் சீட்டுக்கான விண்ணப்பம் பெறப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா, காத்தான்குடி பிரதேச செயலாளர் உதய சிறீதர் ஆகியோரிடம் கடவுச் சீட்டுக்கான விண்ணப்பம்
விண்ணப்பதாரியினால் ஒப்படைக்கப்பட்டு நடவடிக்கை ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலாளர் உதய சிறீதர், உதவி பிரதேச
செயலாளர் சில்மியா, கணக்காளர் சித்ரா, நிருவாக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Home கிழக்கு செய்திகள் மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலகத்தில், கடவுச்சீட்டிற்கான கைவிரல் அடையாளப்பதிவு ஆரம்பம்