மட்டக்களப்பு பிரதான அஞ்சல் திணைக்களத்தில் அஞ்சல் தின நிகழ்வுகள்

0
194

149 உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு பிரதான அஞ்சல் அலுவலகத்தின் நிகழ்வுகள் பிரதம தபால் அதிபர் மயில்வாகனம் ஜெயரட்ணம் தலைமையிலும், கிழக்குமாகாண பிராந்திய நிர்வாக காரியாலயம் மற்றும் மட்டக்களப்பு பெரும்பாக அஞ்சல் அத்தியட்சகர் காரியாலயத்திலும் நிகழ்வுகள் இடம்பெற்றன.

தேசியக்கொடி மற்றும் அஞ்சல் கொடி ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.

அஞ்சல் சேவைக்கான உத்தியோகத்தர்களின் உறுதி மொழி சாத்தியப்பிரமான நிகழ்வும் நடைபெற்று, பாற்சோறு பரிமாறப்பட்டது.

அதிதிகளாக மாவட்ட அஞ்சல் அத்தியட்சகர் சோமசுந்தரம் ஜெகன், பிரதம அஞ்சல் போதனாசிரியர் பொன்னம்பலம் நரேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அஞ்சல் அலுவலக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், ஊழியர்களும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.