மட்டக்களப்பு புகையிரத ஒழுங்கை வீதி விஸ்தரிக்கப்பட்டு காபட் இடல்

0
187

மட்டக்களப்பு மாநகரின் நிலையான அபிவிருத்தியின் கீழ் மாநகர சபை முன்னெடுத்து வரும் திட்டத்தின் வீதி புனரமைப்பு பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் பொதுமக்களினால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க 10ஆம் வட்டாரம் உறுப்பினர் சிவம் பாக்கியனாதனினால் மாநகர சபைக்கு முன்வைக்கப்பட்ட வீதிப்புனரமைப்புக்கான பிரேரணைக்கு அமைய புகையிரத வீதி விஸ்தரிப்புக்கான புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தொழில்நுட்ப உதவியுடன் வீதிக்கான காபட் இடும் பணிகள் இன்று முதல்வரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இன்று ஆரம்பிக்கப்பட்ட வீதிக்கான காபட் இடும் நிகழ்வில் மாநகர சபை உறுப்பினர்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.