மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின், உள்ளக அழகுபடுத்தல் வேலைத்திட்டத்திற்கு இராஜாங்க அமைச்சர் எஸ்.சந்திரகாந்தன் உதவி வழங்கியுள்ளார்.

0
164

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 150வது ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் வகையில், கல்லூரியில் உள்க வீதிகள் மற்றும் கல்லூரி வளாகப் பகுதிகளுக்கு
காபெட் இடுதவற்கு இராஜாங்க அமைச்சர் சிவநேதுரை சந்திரகாந்தன் நிதியொதுக்கீடு செய்துள்ளார்.
மிக்கேல் கல்லூரியின் 150 ஆண்டு நிறைவு விழாவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் பங்கேற்கவுள்ளார்.
பாடசாலையின் அழகுபடுத்தல் வேலைத்திட்டம் தொடர்பில், மிக்கேல் கல்லூரி பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோரின் வேண்டுகோளுக்கு இணங்கவே இராஜாங்க
அமைச்சர் நிதியொதுக்கியிருந்தார்.
வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் கல்லூரியின் உள்ளக வீதிகள் மற்றும் கல்லூரி வளாக பகுதிகள் காபட் இடப்படவுள்ளன.
கல்லூரி வளாகத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பணிகள் தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பு.பிரசாந்தன்,
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர் எந்திரி வரதன், நிறைவேற்றிப் பொறியாளர் எந்திரி லிங்கேஸ்வரன்,
கல்லூரி முதல்வர் அன்ரனி பெனடிக் ஜோசப் ஆகியோரோடு அவதானிப்பில் ஈடுபட்டார்.