மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமானது

0
336

மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் பழைமை வாய்ந்த கத்தோலிக்க பேராலயமான மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் வருடாந்தம் நடாத்தப்படும் திருவிழாக்கள் கடந்த வருடங்களில் ஏற்பட்ட அசாதாரன சூழ்நிலை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் மீண்டும் தற்போது சுமூகமான நிலை ஏற்பட்டுள்ள நிலையில் பேராலயம் மிக விசேட விதமாக அலங்கரிக்கப்பட்டு பங்கு மக்களினால் பங்குதந்தைக்கு அளிக்கப்பட்ட விசேட வரவேற்புடன் 2022ஆம் ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

பங்குத்தந்தை ஜோர்ஜ் ஜீவராஜ் அடிகளார் தலைமையில் நேற்று மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆலய திருவிழாவின் முதல் நவநாள் திருப்பலியினை அருட்பணி ஜூலியன் அடிகளாரினால் ஒப்புகொடுக்கப்படடது.

ஆலய திருவிழா நவநாள் காலங்களில் விசேட திருப்பலி இடம்பெறுவதுடன் எதிர்வரும் 14ஆம் திகதி மாலை அன்னையின் திருச்சொரூப பவனியும் அதனைத்தொடர்ந்து விசேட நற்கருணை வழிபாடும் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் 15ஆம் திகதி காலை மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் இடம்பெறவுள்ள கூட்டுத்திருப்பலியுடன் நிறைவுபெறவுள்ளது.