மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான வருடாந்த ஒன்றுகூடல்

0
145

மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் 2023 ஆம் ஆண்டுக்கான வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகத்தின் தலைவர் மாமாங்கராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயரும் சிவில் சமூக அமைப்பின் போசகருமான ஜோசப் பொன்னையா ஆண்டகை, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளிதரன், மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சனி ஸ்ரீகாந்த், மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்
அமல் எதிரி மான, மட்டக்களப்பு கல்லடி 243 வது இராணுவ படை பிரிவு கட்டளை அதிகாரி லெப்டினல் கேணல் தம்மிக , உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எல்.எம்.ஜெமில் மற்றும்
சிவில் சமூக அமைப்பின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
1984 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூக மேம்பாட்டுக்காக பல பணிகளை முன்னெடுத்து வரும் மாவட்ட சிவில் சமூக அமைப்பின்
வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வில், 2023 ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட ஒரு வருட செயற்பாடுகள் தொடர்பான அறிக்கை
காணொளி மூலம் காட்சிப்படுத்தப்பட்டதுடன், கிழக்குப் பல்கலைக்கழக புவியில் சிரேஷ்ட விரிவுரையாளர் ஆர்.கிருபராஜாவின் கருத்துப் பகிர்வும்
இடம்பெற்றது.
முதன்மை உரையினை மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயரும், சிவில் சமூக அமைப்பின் போசகருமான ஜோசப் பொன்னையா ஆண்டகை, வழங்கியதோடு, சிறப்புரைகளை
அதிதிகள் வழங்கினர்.
நிகழ்வில் களுவன்கேணி கிராமத்தில் இருந்து முதல் முறையாக மருத்துவ பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட செங்கலடி மத்திய கல்லூரி மாணவி செல்வி சி.டிசாந்திக்காவின்
கற்றலுக்கு தேவையான நூல்களை பெற்றுக்கொள்வதற்கு நிதி உதவியும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்து.