மட்டக்களப்பு மாவட்டத்தில் 10 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

0
882

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்குள்ளானவர்களுடன் நேரடியாக தொடர்பு பட்டவர்கள் மற்றும்,பொதுமக்களுடன் சேவை நிமித்தம் நேரடியாக தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான ரபிட் அன்டிஜன் பரிசோதனை மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டன.

சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொதுசுகாதார பரிசோதகர்களினால் 40 நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட ரபிட் அன்டிஜன் பரிசோதனைகயில் 10 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துள்ள கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பி.சி.ஆர் மற்றும் ரபிட் அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.