மட்டு. அரசாங்க அதிபர் அரசியல் கைதியாக சிக்கியுள்ளார்: இரா.சாணக்கியன்

0
257

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பிள்ளையான்,வியாழேந்திரன் போன்றவர்களிடம் அரசியல் கைதியாக சிக்கியுள்ளதாகவும்
அவரை அதிலிருந்து விடுவிக்கவேண்டும் எனவும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டு.ஊடக அமையத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இதேவெளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் கொவிட் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான கூட்டங்களுக்கு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவதில்லையெனவும் அவர் இதன்போது குற்றஞ்சாட்டினார்.
பிள்ளையான் முதலமைச்சராக இருந்தபோது பாசிக்குடாவில் உருவாக்கப்பட்ட ஹோட்டல்களில் ஒரு தமிழருக்கு நியமனத்தை வழங்கமுடியாதவர்கள் துறைமுக நகரில் மட்டக்களப்பைச் சேர்ந்தவர்களுக்கு எவ்வாறு நியமனத்தை வழங்குவார்கள் என்று கேள்வி எழுப்பினார்.