மட்டு.காத்தான்குடி பிரதேச செயலக பிரிவில்
உத்தியோகத்தர்களை பாராட்டல்

0
112

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலக பிரிவிலுள்ள புதிய காத்தான்குடி மற்றும் காத்தான்குடி சமுர்த்தி வங்கிகளுக்கு காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதய சிறீதர் நேரடியாகச் சென்று சமுர்த்தி வங்கி நடவடிக்கைகளை கடந்த 2022ம் ஆண்டில் சிறப்பாக மேற் கொண்ட உத்தியோகத்தர்களை பாராட்டியதுடன் கடந்த 2022ம் வருடத்தில் இலாமீட்டும் நடவடிக்கையை மேற் கொண்டமைகக்காக பாராட்டு;க்களையும் தெரிவித்தார்.

இதன் போது வங்கியில் கடமையாற்றும் சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களை பாராட்டினார்.
இந்த பாராட்டு வைபவம் புதிய காத்தான்குடி சமுர்த்தி வங்கி வலயத்தில் இடம் பெற்றது.

இதில் காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதய சிறீதர், உதவி பிரதேச செயலாளர் எம்.எஸ்.சில்மியா, கணக்காளர் சித்திரா, சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி பத்மா ஜெயராஜ், முகாமைத்துவ பணிப்பாளர் வாமதேவன், திட்ட முகாமையாளர் திருமதி சுபந்தினி கண்ணன் வலய முகாமையாளர்களான ஏ.எல்.இசட் பஹ்மி, எஸ்.எச்.முசம்மில் உட்பட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.