28 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மட்டு. காத்தான்குடியில் நூல் வெளியீட்டு விழா

மட்டக்களப்பு காத்தான்குடியில் கலாநிதி றவூப் ஸெய்ன் நழீமி எழுதிய ‘முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் ஒர் இஸ்லாமிய நோக்கு’ நூல் வெளியீட்டு விழா நேற்று மாலை பீச் வே மண்டபத்தில் இடம்பெற்றது.
ஆய்வுக்கும் மேம்பாட்டிற்குமான இஸ்லாமிய மகளிர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவி திருமதி அனீஸா பிர்தௌஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் காத்தான்குடி பொலீஸ் நிலைய பொலிஸ் அதிகாரி உவைஸ் உட்பட முக்கியஸ்தர்கள், உலமாக்கள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
சிறப்புரையை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் அப்துல் அஸீஸ் நிகழ்த்தினார். நூல் திறனாய்வு உரையை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.வை.சுஹீரா நிகழ்த்தினார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles