மட்டு. பேத்தாழை வாழைச்சேனை திருவருள்மிகு மாவடி மாரியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு நிறைவு

0
192

மட்டக்களப்பு பேத்தாழை வாழைச்சேனை திருவருள்மிகு மாவடி மாரியம்மன் ஆலய வருடாந்த திருச்சடஙகு, இன்று திருக்குளிர்த்தி பாடலுடனும் கும்பம் சொரிதல்
நிகழ்வுடனும் நிறைவு பெற்றது.
ஆலய வருடாந்த திருச்சடங்கு கடந்த 19ம் திகதி திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி, தொடர்ந்து 15 நாட்கள் உற்சவங்கள் நடைபெற்று இன்று இறுதிநாள்
உற்சவமானது அதிகாலை அம்மனுக்கு பள்ளைய பூசைகள் நடைபெற்று, கன்னிமார் பூசையும் தேவாதிகளின் அருள் ஆசியுடன் அம்மன் கும்பி பாடல் சிலம்பொலியுடன்
தீர்த்தகேணியில் திருக்கும்பம் சொரிதலுடன் சடங்கு உற்சவம் முழுமை பெற்றது.
உற்சவ கால பூசைகள் யாவும் பிரதம பூசகர் அ.அரசரெத்தினம் மற்றும் உதவி பூசகர் ச.சந்திரகாசன் ஆகியோர்களினால் நடாத்தப்பட்டது.
இன்றைய இறுதி உற்சவத்தில் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்துகொண்டார்.