மட்டு.போரதீவுப்பற்று பிரதேச
சபையின் 55ஆவது சபை அமர்வு

0
177

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச சபையின்
55 ஆவது சபை அமர்வுகள் போரதீவுப்பற்று பிரதேச சபை தவிசாளர் யோ.ரஜனியின் தலைமையில் இரு நிமிட மௌன இறை வணக்கத்துடன் ஆரம்பமானது.

தவிசாளரின் கடந்த மாத சபை அமர்வுக்கான கூட்டறிக்கை வாசிக்கப்பட்டதுடன் அதனை அனைவரும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர்.

மண்டூர் கந்தசுவாமி ஆலய உற்சவங்கள் இடம்பெற்ற காலகட்டத்தில் போரதீவுப்பற்று பிரதேச சபையின் செயற்பாடானது குடிநீர் வசதிகள் மேம்படுத்துதல் தின்மக் கழிவுகள் வசதிகள் இரவுபகலாக தொடர்ச்சியாக சபை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் மேற்கொண்டு வந்தனர்.

மண்டூர் கந்தசுவாமி ஆலய உற்சவ நிறைவடைந்தவுடன் ஆலய நிர்வாகத்தினரால் ஆலய உற்சவ காலங்களில் செயல்பட்டு வந்த அனைத்து திணைக்கள உத்தியோகஸ்தர்கள் ஊழியர்களுக்கும் நன்றி கூறப் செலுத்தப்பட்ட போதும் பிரதேச சபை ஊழியர்கள் இரவு பகலாக தொடர்ச்சியாக திண்மக்கழிவுகள் மற்றும் குடிநீர் வசதிகள் செலுத்தப்பட்ட போதும் எமது போரதீவுப்பற்று பிரதேச சபையினை ஒரு இழிவான தரம் குறைந்தவர்களாக பார்ப்பதாக நீதிமன்றத்தினால் அமைக்கப்பட்ட இடைக்கால நிர்வாகமானது செயற்ப்பட்டு வருகின்றமை ஒரு மன வேதனையாக இருப்பதாக சபையில் பிரதேச சபை தவிசாளர் யோ.ரஜனி விசனம் வெளியிட்டார்.

போரதீவுப்பற்று பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் குறித்தும் ஆராயப்பட்டதுடன் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்களுக்கான அனுமதிகளும் வழங்கப்பட்டன.