மத்திய வங்கி ஊழியர்களின் முன்மொழியப்பட்ட சம்பளம் இரத்து!

0
111

இலங்கை மத்திய வங்கி உட்பட அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் நிதி அதிகாரங்களை குறைக்கும் சட்டமூலம் நீதி அமைச்சரால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந் நடவடிக்கை மூலம் மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் நீக்கப்பட்டு அந்த அதிகாரம் நிதியமைச்சு மற்றும் பாராளுமன்றத்திடம் வழங்கப்படும் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எனவே, அண்மையில் முன்மொழியப்பட்ட மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளம் இரத்துச் செய்யப்படும் எனவும், எனினும் நிதியமைச்சுடன் கலந்தாலோசித்து நியாயமான சம்பள உயர்வு குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.