மன்னார் பறவைகள் கழகம், முதலாவது பொது நிகழ்வினை நடத்த ஏற்பாடு

0
174

மன்னார் பறவைகள் கழகம் தனது முதலாவது பொது நிகழ்வினை மன்னாரில் நடத்த ஏற்பாடு செய்துள்ளது.

அதனடிப்படையில் எதிர்வரும் 2 ஆம் திகதி காலை 7 மணி தொடக்கம் 9.30 மணி வரை மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள கோரைக்குளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பறவைகள் கண்காணிப்பகத்தில் பறவைகளைப் பார்வையிடுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதனைத் தொடர்ந்து காலை 10 மணி தொடக்கம் பகல் 12 மணி வரை மன்னார் தேசிய இளைஞர் படை பயிற்சி நிலையத்தில் பறவைகள் மற்றும் அவற்றின் பாதுகாப்பு பற்றிய கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

நிகழ்வில் கலந்துகொண்டு, கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ள முடியும் என ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.