அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை பிரதேசத்தில் ஏரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம் ஒன்று இன்று பதிவாகியுள்ளது.
மருதமுனை-பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இமாம் கஸ்ஸாலி வீதியில் வீடு ஒன்றில் சமையலில் ஈடுபட்டிருந்த போது குறித்த வீட்டின் எரிவாயு அடுப்பு வெடித்தாக வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.
சமையலில் ஈடுபட்டிருந்த நபருக்கே அல்லது வேறு எவருக்கும் எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லையென்பதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பெரியநீலாவணை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.