மின்சாரத்துறையில் எழுந்துள்ள பிரச்சினை தற்போது ஏற்பட்டதல்ல என்பதுடன் அது பலவருடங்களாக நிலவும் மாபியா என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மின்சார சபையின் தொழிநுட்பப் பிரிவுகளில் நீண்ட காலமாகப் பிரச்சினைகள் நிலவுகின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தனியார் பிரிவுகள் தனியாக அதிகளவான மின்சாரத்தைப் பெறுகின்றனர். இதற்காகப் பில்லியன் கணக்கான பணம் செலவிடப்படுகின்றது.
நீண்டகாலமாக இருந்த பிரச்சினைகள் இன்று பாரியளவான முரண்பாடுகளுக்கு வித்திட்டுள்ளன.
எனவே, தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் உரிய பிரிவுகளுடன் இணைந்து கலந்துரையாடி தீர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” – என்றார்.