முக்கிய குழுவிலிருந்து விலகினார் இரா.சாணக்கியன்!

0
194

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கோபா குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் விலகியுள்ளார்.
சபாநாயகரின் இந்த அறிவித்தலை, பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இன்று நாடாளுமன்றில் அறிவித்தார்.
இதனையடுத்து, அவரது வெற்றிடத்துக்கு, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நியமிக்கப்பட்டுள்ளதாக, பிரதி சபாநாயகர் தெரிவித்தார்.
இதேவேளை, பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவின் உறுப்பினராக பரிந்துரைக்கப்பட்ட கலாநிதி ஹர்ஷ டி சில்வா அந்தப் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
அந்த வெற்றிடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத்தின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.