முன்னாள் சபாநாயகர் தேசபந்து கரு ஜயசூரியவுக்கு ‘ஸ்ரீலங்காபிமான்ய’என்ற கௌரவப் பட்டத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கடந்த ஜனவரி 24 ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பில் இந்த விருது வழங்குவதற்கான தீர்மானம் அறிவிக்கப்பட்டது. இதன்படி, எதிர்வரும் பெப்ரவரி 3ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ள நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த கௌரவம், கரு ஜயசூரியவுக்கு வழங்கப்படவுள்ளது. ‘ஸ்ரீலங்காபிமான்ய’ என்பது இலங்கையின் அதியுயர் சிவில் கௌரவமாக அரசாங்கத்தின் சார்பில் ஜனாதிபதியினால் வழங்கப்படுகிறது.
தேசத்திற்கு மிகச்சிறந்த சேவை செய்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.