முருத்தெட்டுவே ஆனந்த தேரரை வாழ்த்திய ஜனாதிபதி!

0
160

நாரஹேன்பிட்டி அபயராமாதிபதியும் மேல் மாகாண பிரதம சங்க நாயக்கரும், கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தருமான அதி வணக்கத்துக்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரரின் ஜனன தினத்துக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வாழ்த்துத் தெரிவித்தார்.

தேரரின் ஜனன தினத்தையொட்டி, இன்று முற்பகல் நாரஹேன்பிட்டி அபயராம விஹாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி , நாயக்கத் தேரரைச் சந்தித்து, நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துத் தெரிவித்தார்.

தேரரை ஆசீர்வதிக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட மஹா சங்கத்தினருக்கு, ஜனாதிபதி அன்னதானம் வழங்கினார்.

கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமஸ்ரீ தர்ம மஹா சங்க சபையின் மஹாநாயக்கர் சங்கைக்குரிய இத்தேபானே தம்மாலங்கார, அமரபுர ஸ்ரீ தம்மரக்கித நிக்காயாவின் மஹாநாயக்கர் திருகோணமலை ஆனந்த தேரர், அஸ்கிரிய பீடத்தின் பிரதிப் பதிவாளர் சங்கைக்குரிய நாரம்பனாவே ஆனந்த தேரர் உள்ளிட்ட மஹா சங்கத்தினரும், இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.