மொட்டுக் கட்சி உறுப்பினர்களின் ஒன்று கூடல்- கட்சியை பலப்படுத்துவது தொடர்பில் அவதானம்

0
113

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடலொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

கட்சியை பலப்படுத்தல், உள்ளுராட்சிமன்ற தேர்தல் மற்றும் நாட்டின் பொருளாதார நிலைப்பாடு குறித்த விடயங்கள் தொடர்பில் இந்தக் கலந்துரையாடலின்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம்,

எதிர்வரும் உள்ளுராட்சிமன்ற தேர்தலை கட்சி என்ற ரீதியில் பலம்வாய்ந்த அணியாக எதிர்கொள்வது குறித்து கலந்துரையாடப்பட்டது.

எம்மால் பலம்வாய்ந்த அணியாக செயற்பட முடியும் என தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.

இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ

எமக்கும் நாட்டுக்கும் இருக்கும் சவால்களை எதிர்காலத்தில் எவ்வாறு எதிர்கொள்ள போகின்றோம் என்ற விடயம் குறித்து கலந்துரையாடப்பட்டது. அத்துடன் மாகாணசபைத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்ற விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

மேலும் இந்த நெருக்கடியின் மத்தியில் எவ்வாறு அரசாங்கத்திற்கு நாம் உதவ போகின்றோம் என்ற விடயம் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டது என்றார்.