யாழ்ப்பாணம் சுதுமலை பகுதியில் 1600 போதை மாத்திரைகளுடன் இருவரை மானிப்பாய் காவல்துறையினர் கைது செய்தனர்.மானிப்பாய் காவல்துறையினருக்குக் கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய மானிப்பாய் காவல் நிலைய பொறுப்பதிகாரி ஜெயந்த குணதிலகவின் வழிகாட்டுதலில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தகவல் கிடைத்த பின்னர் யாழ். சுதுமலை பகுதிக்குச் சென்ற காவல்துறையினர் உந்துருளியில் பயணித்த இரு இளைஞரை வழிமறித்துச் சோதனையிட்டுள்ளனர். இதன்போது இருவகையிலான 1600 போதை மாத்திரைகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். கொக்கோவில் பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 22 வயதுடைய இரு இளைஞர்களையே காவல்துறையினர் கைது செய்தனர்.
கைது செய்த இருவரையும் இன்று மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.