யாழில் ஒவ்வாமை உடையோருக்கு இன்று தடுப்பூசி!

0
572

சிலவகை மருந்துகள், ஊசி மருந்துகளுக்கு ஒவ்வாமை உடையவர்கள் மற்றும் வேறு ஆபத்துக்குரிய நோய் நிலைமை உடையவர்களுக்கு அவசர சிகிச்சைப் பிரிவுகள் உள்ள வைத்தியசாலைகளுக்கு அழைத்து கோவிட்-19 தடுப்பூசி வழங்கும் திட்டம் யாழ்ப்பாணத்தில் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் காலை 8 மணி முதல் தடுப்பு ஊசி ஏற்றும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது யாழ்ப்பாண மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் வைத்தியர்கள் தாதியர்கள் இணைந்து குறித்த தடுப்பு ஊசி ஏற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டு உள்ளார்கள் மேலும்

சாவகச்சேரி, தெல்லிப்பழை, ஊர்காவற்றுறை, பருத்தித்துறை ஆகிய ஆதார வைத்தியசாலைகளில் இவ்வாறு தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.

கொவிட்-19 தடுப்பூசிகள் பெற்றுக்கொள்ள வருகை தந்தவர்கள் மருத்துவர்களால் பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் மருந்து ஏற்றப்படுகிறது.

பெருமளவானோர் தமக்கான கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வைத்தியசாலைகளுக்கு வருகை தந்துள்ளனர்.