யாழ்ப்பாணத்தில் பட்டப்பகலில் கூரையை பிரித்து இறங்கி தங்க நகைளைத் திருடிய இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏழாலை தெற்கு, மயிலங்காடு பகுதியில் வீடு புகுந்து தாலிக்கொடி உட்பட்ட சில தங்க நகைகள் என சுமார் 10 பவுண் நகைகள் திருடப்பட்டன.
வீட்டில் இருந்தவர்கள் வெளியே சென்றிருந்தவேளை மதியம் வீட்டின் கூரையை பிரித்து இந்தத் திருட்டு மேற்கொள்ளப்பட்டிருந்தது. இது குறித்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
இதனடிப்படையில் குறித்த நகைகளைத் திருடிய, அதே பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவர் திருடிய நகையும் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் ஏற்கனவே பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என பொலிஸார் கூறினர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.