யாழ்ப்பாணம் நெல்லியடி பொலிஸாரால் இறைச்சிக்காக வெட்டுவதற்கு கொண்டு செல்லப்பட்ட மூன்று ஆடுகள் மீட்கப்பட்டுள்ளன.
நெல்லியடி பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த மூன்று ஆடுகளும் துன்னாலை குடவத்தை பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.
பொலிஸ் சார்ஜன்ட் எம்.எஸ்.எச்.பி.ஜெயரத்தின தலைமையிலான பொலிஸ் கான்ஸ்டபிள்களான கு.வினோத், சாருஜன், தில்லின உட்பட்ட பொலிஸ் அதிகாரிகள் குறித்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதேவேளை குறித்த ஆடுகள் தொடர்பில் எந்தவித முறைப்பாடுகளும் நெல்லியடி பொலிசாருக்கு கிடைக்கவில்லை எனவும் உரியவர்கள் தம்முடன் தொடர்பு கொள்ளுமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.