26.3 C
Colombo
Saturday, September 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

யாழில் விபத்தில் உயிரிழந்த சிறுவனுக்கு நீதி கோரி அராலியில் கவனயீர்ப்பு!

யாழில் விபத்தில் உயிரிழந்த சிறுவனுக்கு மரணத்திற்கு முறையான விசாரணையை கோரி அராலியில் கவனயீர்ப்பு!

நேற்றுமுன்தினம் யாழ். சத்திரத்துச் சந்தியில் இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்த தாவடியைச் சேர்ந்த சிறுவன் அஜித்தன் அபிநயனின் மரணத்திற்கு முறையான விசாரணையை மேற்கொள்ளுமாறு கோரி அராலி மத்தி பகுதியில் இன்றையதினம் கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த கவனயீர்ப்பு நடவடிக்கையானது அராலி செந்தமிழ் சனசமூக நிலையத்தில் இருந்து ஆரம்பித்து அராலி சமுர்த்தி வங்கியடியில் நிறைவுற்றது.

இதன்போது “அதி வேகத்தை குறைப்போம் விபத்துகளைத் தவிர்ப்பபோம், அபிநயனின் மரணத்திற்கு முறையான விசாரணை வேண்டும், மாணவர்களது உயிரைப் பறிக்காதே” என்ற வாசகங்கள் உள்ளடங்கிய பதாதைகளை ஏந்தி கோஷமிட்டவாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

சமூக செயற்பாட்டாளர் பி.தனுசியா அவர்களது தலைமையில் நடைபெற்ற இக் கவனயீர்ப்பில் வலி. மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் க.இலங்கேஸ்வரன், சமூக செயற்பாட்டாளர் மா.நாகரட்ணம், மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles