யாழில் விமானப் படை கண்காட்சியில் கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது

0
84

யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுவரும் இலங்கை விமானப் படையின் கண்காட்சிக்கு இரண்டு கிலோ கிராம் எடையுள்ள கேரளக் கஞ்சாவுடன் சென்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நயினாதீவைச் சேர்ந்த 26 வயதான பெண்ணே இரண்டு கிலோ கிராம் எடையுள்ள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டார்.

இலங்கை விமானப்படையின் 73வது வருட நிறைவை முன்னிட்டு ‘வான் சாகசம் – 2024’ கண்காட்சி நிகழ்வுகள் யாழ்ப்பாணம் – முற்றவெளி மைதானத்தில் இன்று ஜந்தாவது நாளாகவும் இடம்பெற்றுவருகின்றன.

இதன்போது கண்காட்சி பிரதான நுழைவாயிலில் கண்காட்சிக்கு பொதியுடன் வந்த பெண்ணை சோதனையிட்டபோது அவரிடம் கஞ்சா இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த பெண் விமானப்படையினரால் கைதுசெய்யப்பட்டு, யாழ்ப்பாண பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டநிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.